About Me

2021/04/13

தந்தையின் தாலாட்டு

 






அன்புத் தூளியிலே 
அணைத்த கரங்களுக்குள்/ 
தாய்மையைக் கண்டேனே 
தந்தையும் தாலாட்டுகையில்/

இரவின் மடியினில் 
இதமான துயிலினை/
இரசித்த நினைவுகள் 
இன்பத்தின் உயிர்ப்பில்/

வீரத்தின் சாயலை 
நாமத்தில் நினைவூட்டி/
விருப்புடன் கற்றிடவே  
விதையுமானார் வாழ்வினிலே/

பாசத்தை ஒலியாக்கி 
பாதைக்குள் வழிகாட்ட/
சிந்திய வாசனை 
குன்றவில்லையே நெஞ்சுக்குள்/

ஜன்ஸி கபூர் - 18.12.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!