About Me

2021/04/13

பாதை வழியே

  

விதியின் வழியே 
படர்கின்ற பயணத்தில்/
விரிகின்றதே வாழ்வும் 
வியக்கின்றதே மனதும்/

கற்களும் முட்களும் 
காயங்களின் வலிகளும்/
பூக்களின் ஓசைக்குள் 
சப்தமிடுகின்றன மெலிதாக/
 
நகர்கின்ற தரிசனங்களில் 
பதிகின்ற சவால்கள்/
சிகரமென உயர்ந்தே 
சிந்தையதைத் துளைக்கையில்/

வருத்தத்துள் வீழ்ந்திடாமல் 
வலிமையோடு வென்றிட/
முயற்சியின் எழுச்சிக்குள் 
எழுகின்றேன் தன்னம்பிக்கையுடன்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020
-------------------------------------------------------------------------------- 

பாதை வழியே
---------------------------
பாதை வழியே நடக்கின்றேன் இதமாக/
பரவசத்தில் மனமும் பற்றுதே தரிசனங்களில்/

வீழ்கின்ற அருவி வெண்நுரை தூவி/
தென்றலில் கரைகையில் களிக்குதே மனமும்/

பச்சை விரிப்பில் பதுங்கும் புற்களில்/
இச்சையோடு முத்தமிடுகின்றன வெண்பனித் துளிகள்/

நீள்கின்ற பயணம் இரசிக்கின்றேன் ஒவ்வொன்றாய்/
மாறுகின்ற காட்சிபோல் வாழ்க்கையும் நிலையற்றதே/

அஸ்கா சதாத்  - 17.11.2020

 








 

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!