About Me

2021/04/13

நதியில்லா ஓடம்

 


கனாக்கள் உயிர்க்காத கண்களின் வலிதனை/

கண்ணீரும் சொல்கையில் கன்னங்களும் கதறுதே/

தொலைக்கின்றேன் வசந்தங்களை தொல்லையாக வறுமையே/

நிலையில்லா உலகினில் நிம்மதியும் தொலைவிலே/ 


வற்றிய கரையில் பற்றுடன் காத்திருக்கின்ற/

ஒற்றைக்கால் கொக்காகி வீணாகிறதே எதிர்பார்ப்புக்கள்/

சுற்றிப் படர்ந்தே சுமையாகின்ற துரோகங்கள்/

எட்டி உதைக்கையில் எரிகின்றேன் நெருப்பிலே/


முடிவுறுத்தாத ஆசைகள் முகம் காட்டுகையில்/

துக்கங்களை ஏந்தித் துடிக்கின்றதே ஏக்கங்கள்/ 

விடிவில்லா எதிர்காலம் விழுகின்ற பூமியில்/

அலைகின்றதே வாழ்வும் நதியில்லா ஓடமாகி/


ஜன்ஸி கபூர் -5.12.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!