About Me

2021/04/14

துடுப்பில்லாத் தோணிகள்

 


 இலக்கது இல்லாது இயங்கிடும் வாழ்வினில்/

இரணமே துரத்துகின்றது இன்னலுக்குள் வீழ்த்தி/

உழைப்பைத் தேடி ஊருக்கு வெளியே/

உலாவுகையில் இழக்கின்றனர் உறவுகளின் அருகாமையை/


கல்வியைச் சுமக்கும் கரங்களில் சுமைகள்/

கசக்குவார் தொழிலாளிகளாக கருக்குவார் வருங்காலத்தை/

பெண்மையைக் கசக்கி பெருவலிக்குள் திணிக்கும்/

பொல்லாத மாந்தரால் பெருந்துயரில் மங்கையும்/


பெற்ற பட்டத்துக்குள் பொருந்தாத உழைப்பு/

பெற்றாலும் ஏற்கார் பொழுதுகளை வளமாக்கார்/

முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்தின் வளங்களே/

முயன்றிடாமல் புறந்தள்ளுவார் முகாமிடும் சந்தர்ப்பங்களை/


அடுத்தவர் தயவுக்காக அல்லலுடன் காத்திருந்து/

அலைக்கழிவார் வீணாக அடைந்திடுவார் சிறுமைதனை/

நிலையில்லா மனதோடு நிதமும் அலைந்தே/

நிற்கின்றனர் நிர்க்கதிக்குள் துடுப்பில்லாத் தோணிகளாக/


ஜன்ஸி கபூர்  - 13.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!