About Me

2021/04/13

யாம்பட்ட தாம்படாவாறு

 விழிகளில் மொய்க்கின்ற அழகுக் காதல்/

தழுவிய துணையின் பிரிவைத் தாங்குமோ/

அழுகையின் ஈரமும் உயிரை நனைக்கையில்/

நழுவுமே துன்பமும் அனலுக்குள் வீழ்த்தி/

அன்பின் தழுவலில் சிலிர்த்திடும் காமத்தில்/

அகலுமோ பெண்மையின் நாணமும் இடமறியாமல்/

அடுத்தவர் அறிவாரோ உள்ளத்தின் உணர்வோட்டத்தை/

ஆருயிரின் பிரிவுத் தவிப்பின் வலியிது/


யாம் பெற்ற காமத் துன்பங்களை/ 

தாம் அறிந்தால் பரிகசிப்பாரோ தோழியரும்/

என் வலியினைக் கேலிக்குள் வீழ்த்துவோர்/

அன்பனோடு இணைந்திடவே வழியும் கூறுவாரோ/


திரைக்குள் பழித்தோர் வார்த்தைகள் இன்று/

உரைக்கின்றதே செவியினில் நேரலைத் தாக்கமாக/

இரவின் சுழற்சிக்குள் புணர்வும் பிரிவும்/

இயல்பே இதயமுள்ள மாந்தர் வாழ்வில்/


இத்துன்பம் அறியாதோர் இகழ்கின்றீர் எனக்கே/

இதயத்தின் துடிப்பினை உடைக்கின்றீர் வார்த்தைகளில்/

என்றே தனக்குள் உரைக்கின்றாள் தலைவியும்/

எதிரில் இருக்கும் தோழியரின் செவியுமேந்தவே/


ஜன்ஸி கபூர் - 01.10.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!