About Me

2021/04/13

எனக்கே எனக்கா

வெண்ணிலா மெல்ல இறங்கியது மடியினில்/
கண்களோ தென்றலைத் தழுவியது ஆசையுடன்/
மண்ணும் மின்னியது செல்ல நடைதனில்/
எண்ணற்ற இன்பத்தில் குவிந்தது மனமும்/
 
பிஞ்சு விரல்களின் கொஞ்சும் அன்பால்/
நெஞ்சினில்;  தேனும் வருடியதோ இதமாக/
மழலை மொழிதனில் மலர்கின்ற  சிந்தைக்குள்/
அழகின் அகராதியும் மனப்பாடம் ஆனதே/

எனக்கே எனக்கா கிடைத்திட்ட வரத்தினை/
தாய்மை நிழலுக்குள் போர்த்திக் கொண்டேன்/
தரணி வாழ்விற்குள் அர்த்தமும் கண்டேன்/
அடுத்தார் பலித்திடாது கிடைத்ததே செல்வமாகி/

ஜன்ஸி கபூர் - 21.12.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!