About Me

2021/04/14

கன்னமிரண்டும் கிள்ளாதே


விழிகள் நான்கும் பேசுகின்ற அன்பிலே/
விழுகின்றேனே நானும் உன்றன் மனதுள்/ 
விரல்கள் பேசிடும் மொழியில் மெல்ல/
விரிகின்றதே நாணமும் நனைகிறேன் நானுமே/
 
சொருகுகின்றாய் காந்தப் புன்னகையை நெஞ்சில்/
சொக்கி நிற்கின்றேனே நினைவுகளை வருடியே/
செதுக்குகிறேன் சொந்தமாக உன்னையே என்னில்/
சோகத்தை உதிர்க்கின்ற சுகமும் நீதானே/

கன்னமிரண்டும் கிள்ளாதே சிலிர்க்குதே உயிருமே/
கன்னியென்னை மூடுகின்றாய் உன்றன் நிழலாலே/
 
 ஜன்ஸி கபூர் - 25.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!