About Me

2021/04/13

கருப்பு நிலா

 

மேனியின் நிறத்தினில் பார்வைகள் தொடுத்தே/
வலியினை வீசுகின்ற வக்கிர உலகினில்/
வாழ்ந்திடும் பாதையினை அறிந்திடாப் பேதை/
தாழ்கின்றாள் தவிப்பினில் தன்மானமும் கருகிட/

அழகினை ஆராதித்தே பழகிடும் மாந்தர்/
அறியாத அகமே அன்பினைத் தேக்கும்/
வருத்திடும் சமூகம் வழிதனைக் காட்டாது/
துரத்துகின்றதே தினமும் விதியெனும் பெயரால்/

விழிகள் எதிர்பார்ப்பில் நழுவுகின்ற போதெல்லாம்/
நழுவுகின்றதே ஆசைகளும் கண்ணீரில் கரைந்திட/
தழுவிய மாங்கல்யம் கழுத்தினை இறுக்கிட/
அழுகின்றதே உணர்வுகள் ஆறாக் காயத்துடன்/

கருமைக் கருவறைக்குள் உருக் கொண்டோரும்/
திருமேனிக்குள் தேடும் பொன்னிறக் கலவை/ 
எரிக்கின்ற தணலும் பூக்கின்ற பூவே/ 
நுரைக்கின்றதே கண்ணீரும் உறைகின்றதே வடுவாகி/

ஜன்ஸி கபூர் - 21.12.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!