விழிகளின் மொழியினில் மலர்ந்த காதல்
விதியின் சிறையினில் முடங்கியதே தானாய்
சதி செய்ததோ எதிர்பார்ப்பும் நம்பிக்கைகளும்
சகதிக்குள் மூழ்கியதே எதிர்கால வனப்பும்
புரிந்துணர்வு காணாத துணைகளின் கரங்கள்
வரிகளில் எழுதின விவாகரத்தெனும் முடிவினை
அடுத்தவர் பார்வையில் ஆயிரம் குற்றங்கள்
அனலின் பிம்பத்தில் இல்லறத்தின் சொப்பனங்கள்
ஓர் கூட்டின் அன்றில் பறவைகள்
திசை மாறின உறவும் அறுந்ததனால்
வசை பாடக் காத்திருப்போர் ஏளனத்தில்
இசைந்ததுவே இணை பிரிந்த இதயங்கள்
பிரிவின் எல்லைகளைத் தொடுகின்ற முரண்பாடுகள்
பிள்ளைகளின் வனப்பினையும் வருத்துமே நிதமும்
அலைகின்ற அல்லலுக்குள் அகப்படுகின்ற ஊடல்கள்
சிதைகின்றனவே சிறப்பற்ற வாழ்வின் முடிவினாலே
ஜன்ஸி கபூர் - 22.12.2020

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!