About Me

2021/04/14

அன்னப் பெடையே நாணமேனோ

 


பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்/

பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே/


கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்/

கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்/


கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்/

சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்/


சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்/

பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்/


விரலும் தீண்டா மென் காதலால்/

உரசினேன் உன்றன் உயிரினை அன்பே/


சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே/

ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ/


ஜன்ஸி கபூர் - 14.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!