About Me

2021/04/14

காதலெனும் நதியினிலே

 

காதலெனும் நதியினிலே 
காத்திருந்தேன் தவிப்புடனே/
காலமெல்லாம் களித்திருக்க 
கனிந்திருக்கே அன்புதானே/

பருவத்தின் துடிப்பினிலே 
படருதே ஆசைகளே/
இருவரும் படகுகளாய் 
இனிமைக்குள் உலாவவே/

வெண்பனியாய் மூடுகின்ற
உன்றன் தழுவலுக்குள்/
வெட்கம் விரித்தே 
சாய்கிறேன் மெதுவாக/

கனவுக்குள்ளும் மிதக்கிறே 
நினைவாகிப்  பூக்கிறே/
நனவுக்குள்ளும் சிரிக்கிறே 
நிழல்கூட நடக்கிறே/

இல்லறக் கரையினில் 
இன்பமாக ஒதுங்குகையில்/
இழுக்கிறே வம்புக்குள்ளே 
இதயமதைக் கொஞ்சித்தானே/

உணர்வுகள் ஊஞ்சலாட 
உயிரும் வருட /
உள்ளத்தின் அசைவுக்குள்ளே 
உறவாகி வாழுறே/

ஜன்ஸி கபூர் - 15.11.2020   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!