About Me

2021/04/13

தர்மம் தலை காக்கும்

 

முதுமையும் தாய்மையுமென முகங்காட்டும் யாசகங்கள்/

முகவரியாம் வறுமைக்குள் முக்காடிடும் அவலங்கள்/

இரந்திடும் கரங்களுக்குள் இரக்கமே உணவளிக்கும்/

இதயத்தில் அன்புள்ளோர் இன்னலைத் துடைத்திடுவார்/


ஏழ்மைத் தணலில் ஏக்கங்கள் புகைய/

ஏனிந்த விதியோ ஏற்றமில்லா வாழ்வுக்குள்/

ஏழை எளியோர் ஏந்தும் கரங்களுக்கு/

உதவிகள் செய்வோர் உயர்ந்தவர்களே என்றும்/


நவீனத் தேடலுக்குள் நகர்ந்திடும் உலகில்/

நடுங்கும் தேகங்கள் நடைபாதை ஓரங்களில்/

நாளும் பொழுதுமாக  நாடுவார் தர்மத்திற்காக/  

நல்மனங்களின் கருணையும் நற்செயலாகப் பூத்திடுமே/


ஈகையளிப்போர் என்றுமே  ஈடேற்றமே காண்பார்/

ஈருல மாண்பும்  ஈட்டிடுவார் சிறந்தே/

உயிர்களைப் பேணும்  உன்னதமாம் தர்மம்/

உம்மையும் என்னையும்  உயர்வாய்க் காத்திடுமே/


ஜன்ஸி கபூர் - 8.11.2020

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!