About Me

2021/04/13

முதியோர் இல்லம்

 


உதிரத்தால் செதுக்கி உணர்வால் போர்வையிட்டு/
உன்னதமாகக் காத்த உறவின்று உதறியதோ/
உதிர்ந்தேனே சருகாகி உணர்கின்றேன் விரக்தியை/
உவகையின்றி மீதிக் காலம் கரைகின்றதே/

அன்பால் ரசித்து அறிவால் உயர்த்தி/ 
அனைவருமே மதித்திட அணைத்தே வளர்த்த/
அன்னையும் இன்று அனாதையாகி தனிமைக்குள்/
அவலத்தில் உறைந்தே அந்தரிக்கின்றேன் நானே/

தள்ளாடும் தேகம் சுருங்கும் சுவாசம்/
தவிக்கின்றதே பாசத்தில் தஞ்சமாக வலிதானே/
தவப்புதல்வன் அருகிருக்க தனியாக வாழ்கின்றேன்/
தங்கும் நிழலிந்த முதியோர் இல்லம்/

பேத்திகளுடன் கொஞ்சிடவே பேராசை கொண்டேன்/
பேணிடாப் பிள்ளையால் பேதலிக்குதே மனமும்/
பேசாத வார்த்தைகள் போக்குதோ மகிழ்வை/
பேரிடி சூளும் பொல்லாத விதியிது/

ஜன்ஸி கபூர் - 28.310.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!