About Me

2021/04/15

எது சுதந்திரம்

 

 

  • சுதந்திரம் என்பது பிறர் தலையீடின்றி நாம் அனுபவிக்கும் விடுதலையாகும். உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா? எனும் தேடலுக்கான விடை சுதந்திரத்தின் யதார்த்த நிலையை உணர்த்தும்.
    நாம் அனுபவிக்க வேண்டிய சமூக சுதந்திரமானது அரசியல், தனிமனித, தேசிய, சர்வதேச, பொருளாதார, தார்மீக, வீட்டுச் சுதந்திரம் எனப் பல கூறுகளினாலானது.
    யாரிடம் வலிமை இருக்கின்றதோ அங்கே சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த வலிமை நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதன் தான் விரும்புகின்ற செயல்களை எல்லாம் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. கலாசாரம், பண்பாடு போன்ற வேலிகளை இடுவதன் மூலமாக தனிமனித சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
    குடும்பக் கட்டமைப்பில் நாம் உறவுகளால் சூழ்ந்தே காணப்படுகின்றோம். அவர்கள் ஏதோவொரு விதத்தில் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். எனவே ஒரு தனிமனிதனின் வீட்டுச் சுதந்திரம் முழுமையாக அனுபவிக்கப்பட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறே தார்மீக சுதந்திரமும் மீறப்படுகின்றது.
    ஏழை, பணக்காரன் எனும் அந்தஸ்து பொருளாதாரச் சுதந்திர நிலைமையைச் சிதைக்கின்றது.
    சுதந்திர நாட்டின் முக்கிய பண்பு மனித சமத்துவமாகும். நாட்டில் முழுமையான சமத்துவம் பேணப்படுகின்றதா? அவ்வாறாயின் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?
    ஒரு பெண்ணால் இரவில் தனியாக நடமாட முடிகின்றதா?
    வருடாவருடம் சுதந்திரதினம் கொண்டாடுகின்றோம். ஆனால் அடிமைத்தனமான அடித்தள உணர்வினை நாம் அறுப்பதாக இல்லை. வரிகளாலும், எழுத்துக்களாலும் முன்மொழியப்படுகின்ற சுதந்திரம், உணர்வு ரீதியாக இன்னும் செயலுருப் பெறப்படவில்லை என்பதே இன்றைய உண்மை நிலையாகும். சுதந்திரமாக வாழ்கின்றோம் எனும் மாயைக்குள் நாம் நமது சுதந்திரத்தை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
    ஜன்ஸி கபூர் - 26.10.2020
  •  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!