About Me

2021/04/13

மஞ்சள் நாண்

 

விழியில் நாணங் கலந்து
கன்னத்தில் மருதாணிச் சாறு நனைத்து
மனசெங்கும் துடிப்பு நிறைத்து
உயிரிலே உன்னைக் கரைத்து
காத்திருந்தேன் கனவுகளுடன்
காதலோடு கசிந்தாய் மெல்ல!!

மென் பாதம் தொட்டு
நீ சூட்டும் மெட்டி ஒலி........
மெட்டசைக்கும் நம் காதலோசையாய்
மொட்டவிழ்த்து நானுமுன் கரம் வீழ
எட்டுத் திக்கெங்கும் மேள சத்தம்
நீ கட்டும் தாலி என்னுள் உன்னுயிராய் வருடும்!!

மஞ்சள் நாண் பூட்டி .............உன்
விழிக் கொஞ்சலில் முத்தம் சிதைத்து.......
அழகான வாழ்வும் தந்தாய் காதலுடன்
பல காலம் நானும் உன்னவளாய் வாழ!

உன்னைச் சுமக்கின்றேன் நெஞ்சோரம்
என் மேனியின் அறுவடை உனக்காகவே!
உன் உதட்டோரக் குறும்புகளில் சுருங்கும்
முத்தங்களை சேகரிக்கும் தேனீயாய்
தினமுன்னைச் சுற்றும் ராணி நான்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!