About Me

2021/04/14

நெஞ்சு அலையுதடி

 

நெஞ்சுக்குள்ள அலையுதடி உன்னோட நினைப்புத்தான்/
கரும்பும் ஒளிக்குதடி உதட்டின் மொழிக்குள்ள/
கடலும் சுருளுதடி சின்ன விழிகளுக்குள்ள/
மனசும் துடிக்குதடி உன்னோட வாழந்திடவே/

காற்றிலே கரைக்கிறே வாசத்தை தினமும்/
காதலை ஊத்துறீயே தவிக்கிற உணர்வுக்குள்ளே/
மோதுறீயே விழியாலே வீழ்கிறேன்டி வலியின்றி/
தங்கச் சிற்பமே தழுவடி உயிர்ப்பேனடி/

கொட்டுற மழைக்குள்ள நனைகிறேன்டி நானும்/
வெட்டுற மின்னலாப் பூக்குறே அருகாக/
என்னைத் தொட்டுக்கொள்ளடி விரலும் வெட்கப்பட/
பனியைத் தூவுறீயே இரவும் குளிருதடி/

உன்னோட பாசம் மிதக்குதடி நிழலா/
விண்ணுக்கும் கேட்குதடி உன்பெயர் நிலவா/
ஆசைகளைப் பேசுகின்ற கனவுக்கும் தூக்கமில்லை/
அனலுக்குள்ள எரிகிறேன்டி தழுவடி பூந்தென்றலே/ 

ஜன்ஸி கபூர் - 9.11.2020
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!