About Me

2021/04/15

அப்துல் கலாம்


தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் ஆஷியா உம்மா தம்பதியனருக்கு   மகனாக 1931 ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த கலாம் அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே குடும்பத்தைக் காத்தவர்கள்.  

இயற்பியல் இளங்கலைப் பட்டதாரியான அவர்கள் தனது ஆர்வத்தின் காரணமாக விண்வெளி பொறியியல் படிப்பையும் மேற்கொண்டு முதுகலையும் பெற்றார்கள்;. 1960 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளைத் தொடங்கியவர் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார்கள்;. ஹெலிகொப்டர் வடிவமைப்பு அணு ஆயுதச் சோதனை உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களிலும் பங்கேற்றார்கள். இவரது முற்போக்குச் சாதனைகளால் சகல நாடுகளின் பார்வையையும் இந்தியாமீது திருப்பியது மாத்திரமல்ல இந்தியாவும் வல்லரசானது.  

அன்பினால் மக்கள் மனங்களை வென்று 2002 ஆம் ஜூலை 25 ஆம் திகதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்கள். பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அக்கினிச் சிறகுகள் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். 

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதை வலுவூட்ட   முன்னேற்ற இந்தியாவுக்காக கனவுகளைக் கண்டு அதனை நனவாக்க பாடுபட்டு உழைக்குமாறு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டிய மிகச்சிறந்த தலைவர். 2007 ஆம் ஆண்டு தனது குடியரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். பல்வகை ஆளுமைகளுடன்   வாழ்ந்த ஏவுகணை நாயகன் 2015 ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்கள்.  

அந்தவகையில் தனது வாழ்வை எளிமையாக ஆரம்பித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வரலாறும் காலத்தால் மறக்கப்படாதது. 


ஜன்ஸி கபூர்  - 20.10.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!