About Me

2021/04/13

துணிந்து நில் பெண்ணே

 

ஆணாதிக்கக் கரங்களில் 
.........அடங்கிடுமோ பெண்மை/
அவலத்தின் சிறைதனில் 
...........அடிமையும் இவளோ/
அக்னியைச் சூடியே 
..........அகிலத்தில் சிலுவையறையும்/
கரங்களை அறுத்திடவே 
.........அஞ்சாதே பெண்ணே/

சீதனம் தேடி 
......சீர்குலைப்போர் சிந்தையை/
சீவிவிடு நீயும் 
......சிந்தனையைத் தெளித்திடு/
பாலியல் வன்மத்துக்குள் 
........பாவையுன்னை உதிர்த்திடும்/
பாவக்கறையை கரைத்திடு 
.......பாயுமுந்தன் சினத்தாலே/

விரட்டும் துன்பத்தை 
........வீரியத்துடன் சிதைத்திடு/
விழுந்தாலும் தயங்காதே 
........விருட்டென பறந்தோடு/
முறிக்கின்ற சிறகினை 
........நிமிர்த்திடு ஆற்றலோடு/
முடக்குகின்ற சமூகத்தினை 
........முன்னேற்று சீர்திருத்தி/

அறியாமைச் சகதிக்குள் 
.........அவிழ்த்திடுவார் மூச்சினை/
அடங்காக் கட்டாறென 
.........பொங்கிடு அறிவுடனே/
ஆணுக்கு நிகரென 
.........அடைகின்ற உரிமைகளால்/
அடையாளம் காட்டிடு 
........அவனிக்குள் உன்னை/

நாணமும் நளினமும் 
.........நாவடக்கமும் சீர்வரிசையாம்/
நகையும் சிந்திடும் 
.........நற்பண்புகள் கிரீடமாம்/
அறமும் நெய்தே 
.........அன்புடன் பயணித்திட/
துணிந்துநில் பெண்ணே  
.........தூரமல்ல வெற்றிகள்/

குவிகின்ற தடைகள் 
..........குறியீடுகளே சவால்களுக்கே/
குதித்தெழு சாதிக்கவே 
.........குற்றுயிர் நீயல்லவே/
குதூகலத்தின் குத்துவிளக்கே 
.........குனிந்திடாதே குதறிடுவார்/
குன்றாய் உயர்ந்தே 
...........குடும்பமதையும் காத்திடு

ஜன்ஸி கபூர் - 1.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!