About Me

2021/04/13

இருமுகம்

 

அகமும் புறமுமென
அலைகின்ற முகத்தினில்/
அதிரும் உணர்வுகள்
அணைக்குதே வாழ்வினில்/

உதட்டுப் புன்னகைக்குள்
உறைகின்றதே வன்மமும்/
உள்ளத்தின் சோகம்
உறவுக்குள் பூவாகின்றதே/

மெய்க்குள் மூழ்கும்
பொய்களை மறைத்தே/
சாய்வார் வேலிபோல்
சாய்த்திடுவார் வேட்டையினில்/

சீற்றத்தை மறைத்தே
சிரிப்பார் அன்புபோல்/
தோற்றமும் மறைத்தே
ஏற்றிடுவார் மறுமுகத்தை/

ஜன்ஸி கபூர்- 22.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!