About Me

2012/08/10

சிறுகதைகள், விமர்சனங்கள் - ஒரே நோக்கில்



இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் சிறுகதைகள், விமர்சனங்கள், படத் தொகுப்புக்கள்  ஒரே பார்வையில் :- 

(உள்ளே)

இத் தலைப்புக்களின் மீது நேரடியாக அழுத்தி உரிய பதிவுக்குள் நுழைக

சிறுகதைகள்/ குட்டிக் கதைகள்
-------------------------------------------
01. வழி மாறும் பயணமொன்று
02. கானல் நீர்
03. ஆட்டோ கிராப்
04. வாழ்க்கைத்துணை
05. மயக்கமென்ன
06. சாதனை
07. பாட்டி எங்கே போறியள்
08. தவிக்கும் மனசு
09. அந்த சில நிமிடங்கள்
10. என் வாழ்வு உன்னோடுதான்
11. கருகும் மலரொன்று
12. மனசே மனசே
13. மாற்றங்களும் ஏமாற்றங்களும்

---------------------------------
விமர்சன வெட்டுமுகம்
--------------------------------
01. வேரறுதலின் வலி
02. அடையாளம்
03. கவிதைக்காரன்
04. முத்து
05. கண்ணீர் பேசும் ஞாபகங்கள்
06. நண்பனுக்கோர் மடல்
07. மீண்டு வந்த நாட்கள்
08. என்றும் நேசத்துடன்
09. முன்மாதிரி

---------------------------------------------------------------
பதிவிடப்பட்டுள்ள படங்களின் தொகுப்புக்கள்
---------------------------------------------------------------
01. நான் வரைந்தவை 
02. சில நினைவுகள்
03. கதீஜா முராத்
04. உறவுகள் தொடர்கதை
05. நினைவு முகங்கள்
06. நினைவிலிருத்தி
07. நன்றி சொல்லவே
08. Azka & Sahrish



ஒற்றைச் சொல் !


நீயுதிர்த்த ஒற்றைச்
சொல் ............
என் உயிரறுக்கும் தீப்பந்தமாய்
மிரட்டி நிற்கின்றதென்னுள்!

உன் முகம் காணா நேசத்தில்
சிலிர்த்தவென் பாசத்தில்..........
விஷம் தடவும் தேளானாய்
அடுத்தவர் வார்த்தைக்காய்!

தீப்பற்றியெரிகின்றேன்
நீரூற்ற யாருமின்றி .........
ஒற்றை வழி போகின்றேன் - உன்
ஒற்றைச் சொல் வழிநடத்த!

உன் வெந்நீராய் வார்த்தைகள்
வெறித்தனமாய் எனைக் கருக்கவே........
இற்றுப் போன இதயமும்
குற்றுயிராய் வெந்ததுவே!

நீ தந்த கனவுகள்
விழித்திரையறுத்தே மிரண்டோட.....
என் உறக்கமறுத்து கூவுகின்றாய்
நானுன் அந்நியமென!

 நீர்க்குமிழி வாழ்க்கையிலே
நீ விதைத்த வர்ணங்கள்..............
கலைந்ததுவோ  ரசிக்கின்றாய்
உளமதை சிதைத்தே தான்!

இற்றுவரை நானுன்னை
வேற்றவனாய் நினைக்கவில்லை!
நெஞ்சுடைத்தே போகின்றாய்
பஞ்சென்னை காற்றிலுதிர்த்தே!

வெற்றுக் காகிதமென்னில்
நீ போட்ட  கோலங்கள்...........
உன்னொரு சொல்லாலின்று
முற்றுப்புள்ளியாய் ஆனதுவோ!

ஐயகோ...................!
என் பயணத்திலினி தடைக்கல்லாய்
உன் ஒற்றைச் சொல்.........
உயிர் துறந்து போகின்றேன்
சமுத்திரங்களை விழியேந்தி!

பல நிஜங்கள் தெரிந்ததில்
சில கனவுகள் எரிந்ததுவே!
இன்னலின் அகதேசத்தில்
அனலும் புனலுமுறவானேதே!

அடுத்தவருக்காய் எனை விரட்டி- யுன்
நினைவுப் படுக்கையில் முள்விரித்தே.................
நீ தந்த முகவரிகள் - இனியென்
மயான  நிலவறைகள்!

ஆகாயவெளியில் அந்தரிக்கும்
விண்மீன்கள் கதறியழ.................
வெள்ளிநிலா உள்ளம் நொந்து
இருளுக்குள் இறங்கிக் கிடக்கும்!

"நிஜங்கள் வலிக்குமென்ற"
உன் வார்த்தையென் சொத்தாக்கி......
தனிவழியே போகின்றேன்
இனியுன் பார்வை  மறைந்தே!

கள்ளிப்பால் நீயூட்டி விட்டாலே
களிப்போடு அமுதமாகும் என்னுள்............
ஐயத்திலென் னன்பைக் குலைத்தே
சொல்லிட்டாய் ஒற்றைச் சொல்!

ஜன்ஸி கபூர் 

பேசும் எண்ணங்கள் - கட்டுரைகள்



இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் கட்டுரைகள் ஒரே பார்வையில் :- (உள்ளே)

எனக்கு ஊக்கம் தந்து, என் இலக்கிய பயணத்திற்கு தடமாக உங்கள் விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தந்த, தருகின்ற, தரும் சகல என் நட்புள்ளங்களுக்கு நேச நன்றி பல
--------------------------------------------------------------------------------------------

இத் தலைப்புக்களின் மீது நேரடியாக அழுத்தி நுழைக.

01. கவிதாயினி - அறிமுகம்

02. சூரியனும் சந்திரனும் சந்தித்தால்

03. முகநூலும் நானும்

04. நோபல் பரிசு

05. கவிஞர் கண்ணதாசன்

06. மைக்கல் ஜாக்ஸன்

07. என் பதிவுகள்

08. விபத்துக்கள்

09. சிகிரியா

10. திருடிய இதயத்தை

11. கற்றலில் வீழ்ந்தே

12. அறிவோம் எம்மை

13. பெண்ணே

14. உயிர்

15. மரபணு டெங்கு சிகிச்சை

16. யாழ்ப்பாணக் கோட்டை

17. கண்ணேறு

18. சிறுவர் உரிமைகள்

19. கோபம்

20. குழந்தைத்தனமான காதல்

21. ரமழான் சிந்தனை

22. ஒலிம்பிக் போட்டி

23. யப்பானின் 5 எஸ் முறை

24. அயலவர்

25. கவிதை எழுதலாமே

26. ஞாபக அலைகள்

27. சர்வதேச தொலைத் தொடர்பு தினம்

28. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

29. அன்னையர் தினம்

30. சர்வதேச மலேரியா ஒழிப்புத்தினம்

31. அன்பு வந்ததே

32. புகைவண்டி தரும் சிந்தனை

33. பெண் சாரணிய சில நினைவலைகள்

34. வறியவர்க்குதவுவோம்

35. ரமழான் சிந்தனை

36. இறைவனிடம் கையேந்துவோம்

37. பிர் அவ்ன் அழிப்பு

38. பத்ர் போர்

39. பர்மிய முஸ்லிம்கள்

40. 67 வது ஹிரோஷிமா தினம்

41. வலைப்பூவில் விழுந்த கவித்துளிகள்

42. பேசும் எண்ணங்கள்

43. சிறுகதைகள், விமர்சனங்கள்

44. ஐ லவ் யூ சொன்னால்

45. காதலென்பது

46. பகை வேண்டும் புகையில்

47. முகநூலும் தவறுகளும்

48. திருமறையின் அருள்மொழிகள் சில

49. திருவசனங்கள்

50. அல் f பாத்திஹா

51. உலக ஊடக தினம்

52. உலக தாதியர் தினம்

53. சத்தியமும் அசத்தியமும்

54. சித்திரம் பேசுதடீ

55. அஜந்தா இணைப்பு

56. விடைபெறும் ரமழானே

57. சித்திரம் பேசுதடீ

58. முகநூலும் தவறுகளும்

59. சிந்திப்போம்

60. கசங்கிய மலர்கள்

61. பபா அம்புலி

62. ஆசிரியர் கீதம்

63. மிஸ்ட் கால்

- Ms.A.C.Jancy -







மாற்றங்களும் ஏமாற்றங்களும்


சுஹிர்தா............!

அவள் நகரிலுள்ள பிரபல்யமான தொலைத் தொடர்பகத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்தாள். மாதாந்தம் என் கைபேசி பாவனைக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக அந்நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. ஆரம்பத்தில் நிறுவன வாடிக்கையாளர் பிரதிநிதியாகப் புன்னகைத்தவள் நாளடைவில் நட்புடன் பேசத்தொடங்கினாள்.. அரிதான புகைப்படங்களை மின்னஞ்சல் வழியாக எனக்குப் பரிமாறுமளவிற்கு எங்கள் நட்பு  இறுக்கமடைந்திருந்தது.

அவள் எனக்குள் அறிமுகமாகி மூன்றாண்டுகள் உதிர்ந்து விட்டன. அழகான மெழுகுச்சிலை போன்ற உடல் வார்ப்பும், பளிச்சென்ற வெண் தோலும் அவளை எனக்குள்ளுமொரு அழகியாகவே பறைசாற்றியது. அவள் சூழல் கல்வி கற்ற மொழித் தாக்கத்தால் அவள் பாவனை மொழியாக ஆங்கிலமும் சிங்களமும்  நுனி நாக்கில் தவழும். அவள் என்னுடன் ஒருநாளும் தமிழில் பேசியதில்லை.

அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக நான் செல்லும் போதெல்லாம் அவளுடன் இரண்டு வார்த்தைகளையாவது பேசாமல் வருவதில்லை. எனது அலுவல் முடிந்ததும் அங்கு சனக்கூட்டம் குறைந்திருக்கும் நேரத்தில் சிறிது நேரம் எங்கள் சொந்த விடயங்களைப் பற்றியும் கதைத்து விட்டு வருவேன்.

ஓருநாள்  அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். கைபேசி சிணுங்கியது . தன் மென்விரலால் கைபேசியை அழுத்தியவள் "ஹலோ" வென்றவாறே என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"என்  லவ்வர்தான் லைனில் நிற்கிறார் ..........பேசுங்க அவர் உங்களுக்கும் தெரிந்தவர்தான்"

நான் எதிர்பார்க்காமலே தன் 3ஜி கைபேசியை என்னுள் திணிக்க, நான் தடு மாறிப்போனேன்.

 "பரவாயில்ல சுஹி ! "

நான் மறுத்த போதும் வற்புறுத்தி என்னை அவனுடன் பேசவைத்தாள். அவனும் வீடியோ கோலில் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சகஜமாய் நலம் விசாரிக்கத் தொடங்கினான்"

"அவன்.......எனக்குத் தெரிந்தவன்..அவளது வருங்காலக் கணவன்............!"

மகிழ்ச்சியில் என் வாழ்த்துக்களை அவர்கள் வசப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன் என் வீட்டுக்கு!

தொடர்ந்து வந்த நாட்களில் அவள் காதலின் வளர்பிறைச் செழிப்பை எனக்குள் அடிக்கடி காட்சிப்படுத்துவாள்.

"எப்போ உங்கட கல்யாணம், என்னைக் கூப்பிடுவீங்க தானே"

ஒருநாள் நான் வேடிக்கையாகக் கேட்டேன்.

"இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் முடிப்போம், நீங்க இல்லாமலா" காதலின் வசந்தத்தை அனுபவித்துச் சிரித்தாள். அவள் நாணத்தை அன்று ரசித்த போது அந்த அழகியின் இளமை பூத்த வெண் கன்னங்கள் செக்கச் சிவந்து கிடந்தன.

வருடங்கள் இரண்டு தாவியோடியது. நாங்கள் பல தடவைகள் சந்தித்தாலும் கூட அவளின் காதல் பற்றியும், அவனைப்பற்றியும்  துருவியாராயவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பும், எம் வேலைப்பளுவும்  எங்களுக்கிடையில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி நின்றது. கண்டால் கதைப்போம் ..........அதுவும் ஓரிரு வார்த்தைகளாகச் சுருங்கிப் போனது

அண்மையில் ஓர்நாள் வழமைபோல்  எனது கைபேசியழைப்பிற்கான மாதக் கொடுப்பனவைச் செலுத்த  அந்நிறுவனத்திற்கு காலையில் சென்றிருந்தேன்.  அவள் வழமைக்குமாறாக கவுண்டரில் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சுகம் விசாரித்தாள்.  எங்களைப்பற்றி சிறிது நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த போதுதான் அவதானித்தேன் அன்றவள் மிக அழகாகவிருந்தாள். கழுத்து ,கை, விரல்களில் புதிய தங்க நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

"ஏதும் விஷேசமா.............இயல்பாய் நானும் கேட்க, "

சிறிது மௌனித்தவாறு "ம் ம் " எனத் தலையாட்டினாள்.

அவள் காதல் கைகூடிவிட்ட மகிழ்வை நானும் வாழ்த்துக்களாக்கி அவளுக்கு முன்வைக்கப் போகும் போது, இடைமறித்தாள்

அவள் குரல் உடைந்து தளர்ந்து போனது . தான் கல்யாணம் முடிக்கப் போறவர்  பற்றிய விபரங்களைச்  சொன்னாள்.

"என் லவ்வர் என்னைப் பிரிஞ்சு இப்ப ஒரு வருஷமாச்சு!. எங்ககிட்ட பிரச்சினை வந்திட்டுது....அவர்ட்ட நிறைய முரண்பாடுகளிருக்கு. காதலிக்கும் போது அது எனக்குத் தெரியல. ஆனால் கல்யாணத்துக்கு நெருங்கும் போதுதான் அவரோட சுயரூபம், சுயநலம் எல்லாமே வெளியில தெரிஞ்சுது, அவர எங்கட வீட்டாக்கள் வேணாமென்று சொல்லிட்டாங்க"

அவள் தன் சோகங்களை அவிழ்த்தபோது நான் பிரமித்துப்போனேன். அவர்கள் தங்கள் காதலில் காட்டிய உற்சாகமும், நெருக்கமும் நன்கறிந்தவள் நான். சுஹி அவனுக்காக தன் வாழ்வில் காட்டிய மாற்றமும் கூட எனக்குத் தெரியும். அவனது விருப்புக்கேற்பவே அவளது நடை, உடை, பாவனை கூட அவளிடமிருந்து மாறிப்போனது. பிரச்சினைகள் வாழ்வில் ஏற்படுவது இயல்பே! ஏதோ சில அற்பங்களுக்காகவும், அடுத்தவர்களுக்காகவும் அவர்களின் அன்பு   காணாமல் அழுகிப் போனதுதான் எனக்கு கவலையாகவிருந்தது. அந்தப் பிரிவுத் தாக்கமும், ஏமாற்றங்களும், கோபமும் அவர்களிருவரையுமே அந்தக்கனவு  வாழ்க்கையிலிருந்து வேரறுத்து மறுத்து வேறொரு திசைக்குள் தள்ளிவிட்டது.

அவளை நான் கண்ணிமைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த துன்பத்தை அவள் மறைத்தவளாக,

"திருமணத்தைப் பற்றியும், தனக்கு மாப்பிள்ளை வீட்டார் அணிவித்துச் சென்ற திருமண அடையாளத்தைப் பற்றியும் அவள் கூறத் தொடங்க நானோ அதிர்ச்சியிலிருந்தும் கலையாதவளாய் விக்கித்து நின்றேன்..

மனப் பொருத்தப்பாடில்லாத இருவர் திருமணத்தி லிணைவதை விட, பிரிந்து செல்வது மேல்தான். ஏனெனில் சொற்பகால வாழ்வின் சந்தோஷங்களை  அத்துன்பங்கள் எரித்துவிடுகின்றனவே!.

"பெருநாளைக்குப் பிறகு எனக்கு கல்யாணம் வைச்சிருக்கிறாங்க........உங்கள இன்வைட் பண்ணுவேன்.........கட்டாயம் வரணும் "

சுஹா தன்னைச்சுற்றி வரையப்பட்டிருக்கும் விதியின் போக்குகளை எனக்குள் அவிழ்த்துக் காட்ட முயற்சிக்க, நானோ, அவர்கள் கசக்கியெறிந்த அந்த காதல் ஞாபகங்களை எனக்குள் நிழற்படுத்தியவாறு மெதுவாய் வீதிக்குள் இறங்கிக்கொண்டிருக்கின்றேன்.  





வலைப்பூவில் வீழ்ந்த என் கவித் துளிகள்


என் இக் கவியார்வத்திற்கு ஊக்கம் தந்து, என் இலக்கிய பயணத்திற்கு தடமாக உங்கள் விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தந்த, தருகின்ற, தரும் சகல என் நட்புள்ளங்களுக்கு நேச நன்றி பல

இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் கவிதைகள் ஒரே பார்வையில் :-
---------------------------------------------------------------------------------------------

          001. பிறப்பிட நிழலிலே
 
          002. கவிதைக்காரா 

          003. ரகஸியமாய்
   
          004. வலி
 
          005. நவீனத்துவம்   

          006. வருவாரோ 
 
          007. ஊடலேனோ 

          008. வெளிநாட்டு வாழ்க்கை
 
          009. போ நீ போ 

          010. மின்னல்

          011. சுனாமி 
   
          012. முதியோர் இல்ல முகவரிகள்

          013. தாய்மை
   
         014. திறந்து பார்க்காதே   

         015. நிலா நிலா ஓடி வா 
       
         016. காதலித்துப் பார்

        017. நீ

        018. உறக்கம்

        019. ஞாபகம் வருதே

        020. யதார்த்தம்

        021. மணவேலி

        022. நீயே என் உயிராகி

        023. போராளி

        024. பிரிவலை

        025. என்னால் முடியும்

         026. இவர்கள்

         027. பேரினவாதம்

         028. மழை

         029. மே தினம்

         030. முற்றுப்பெறாத பயணம்

        031. புதிர்

        032. என் தாயே

       033. ஏக்கம்

       034. தனிமை

       035. வறுமை தேசம்

       036. நண்பனே

       037. ஏட்டுக்கல்வி

       038. காதலும் அவஸ்தையும்
        
       039. பெப்ரவரி

       040. அன்னைக்கு விண்ணப்பம்

       041. மலரே

      042. முதிர்கன்னி

      043. தேசத்தின் மகுடம்
   
      044. பயணம்

      045. எப்போதும் நீ

      046. ஒரு நாளும் உனை மறவாத
                           
      047. அடிக்கடி
       
      048. அருவி
     
       049. பெண் மனசு

       050. ஒளி நாயகன்
     051. ஓர் நாள்

     052. முதுமையினில்

     053. ஞாபகம் வருதே

     054. அன்றும் இன்றும்

     055. தோழமைக்காக

     056. மாற்றம்
       
     057. மனசெல்லாம்

     058. ஒற்றையாய்

     059. மௌனம்

     060. காத்திரு

    061. சொர்க்கத்தீவு

    062. அட செல்லமே

    063. சிறகறுந்து

    064. மனசு

    065. வருடும் நினைவு
   
    066. சிப்பிக்குள் முத்து

    067. பரீட்சை

    068. பேபி அஸ்கா

    069. ப்ரிய சகி

   070. வந்ததே ரமழான்

   071. தன்னம்பிக்கை

   072. நினைவகம்

   073. ஒற்றை மழைத்துளி

   074. இயற்கை உன் வாசம்

  075. மழைத்தோரணங்கள்

  076. என் அழகிய தேசம்

  077. இரவின் மடியில்

  078. விடியல் பொழுதில்

  079. நிஜங்களின் வலி

  080. உன்னில் நான்

  081. சிறகு விரிக்கின்றேன்

  082. உணர்வோசை

  083. சின்னத்தாமரை

  084. என் தேவதை

  085. அன்பின் வலி

  086. உயிரறுந்து

  087. கவிதை + காதல் = காதலி

  088. ப்ரிய சகி

  089. அழகான பெண்டாட்டியே

  090. முரண்பாடு

  091. இதயம் கிழிந்து

  092.விதியின் காலடியில்

   093. ஆதவன்

   094. பிரிவில்

   095. உன்னால்

   096. நீயின்றி

   097. தகுமோ சொல்

   098. தேர்தல்

    099. செல்வம்

    100. அன்னை

   101. பெண் அவலம்

   102. கண்ணீர்ச்சிலை

   103. கவி தந்து போனவனுக்காய்

   104. அழகி

   105. சொந்தம் எப்போதும்

  106. விதவை

  107. கார்ட்டூன்

  108. மயக்கம்

  109. நினைவெல்லாம் நீ

  110. ஒற்றைச் சொல்

  111. ஆசை ஆசை

  112. விஷமிகள்

  113. வாழ்க பல்லாண்டு

  114. மரணப்பூக்கள்

  115. என்று தணியும்

  116. மழை நின்ற பொழுதில்




- Ms.A.C.Jancy -